அவசரமாக திறக்கப்படுகின்றது மொட்டுவின் புதிய அலுவலகம்!

#Corona Virus #SriLanka #SLPP
Mayoorikka
1 week ago
அவசரமாக திறக்கப்படுகின்றது மொட்டுவின் புதிய அலுவலகம்!

எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

 கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை வியாழக்கிழமை (09) திறந்து வைக்கவுள்ளார்.

 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு தொகுதி மட்டத்தில் கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதித் தீர்மானத்தை பொதுஜன பெரமுன இன்னும் எடுக்கவில்லை.