மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட வாக்குவாதம் : ஒருவர் படுகொலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட வாக்குவாதம் : ஒருவர் படுகொலை!

வெலிகம உயன்கந்த பிரதேசத்தில் இன்று (16) காலை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  

குறித்த நபர் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் சந்தேகநபரின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது தாக்குதல்தாரி கூறிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக அறிய முடிகிறது. 

வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.