ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

 புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். 

கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.  

எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதன்படி, அந்த கலந்துரையாடலில் மீண்டும் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இதுதவிர ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என பலர் இணைந்து கூட்டணியில் செயல்படுவதால், தங்கள் கருத்து, நிலைப்பாடு குறித்து கூட்டணியில் செயல்படுவது குறித்தும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.