பாடசாலைகளில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டியை உடன் நிறுத்தவும்: வெளியான சுற்றறிக்கை

#SriLanka #School #hot
Mayoorikka
1 month ago
பாடசாலைகளில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டியை உடன் நிறுத்தவும்: வெளியான சுற்றறிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இன்று (18) சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.