குற்றக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
குற்றக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த நால்வரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கடந்த 19 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான விசேட நடவடிக்கையின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இதன்படி, ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் மூன்று குற்றக் குழுக்களைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று (20.03) கைது செய்யப்பட்டுள்ளனர். 

மருதானை, மோட்டாறை, கிராண்ட்பாஸ் மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 44, 26, 23 மற்றும் 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின், 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 3 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைது செய்யப்பட்டன. 

கொழும்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும். பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.