சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த கழிவுத் தேயிலை

#SriLanka #Export #Tea #customs #waste #seize
Prasu
1 month ago
சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த கழிவுத் தேயிலை

ஏற்றுமதிக்காக தயாராகவிருந்த கழிவுத் தேயிலை கொண்ட 3 கொள்கலன்கள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கழிவுத் தேயிலை ஏற்றுமதி செய்யவிருந்தபோதே இவற்றைக் கைப்பற்றியதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

 கடந்த வாரமும் இதேபோன்று ஏற்றுமதிக்காக தயாராகவிருந்த கழிவுத் தேயிலை கொண்ட நான்கு கொள்கலன்களை இலங்கை சுங்கம் பொறுப்பேற்றதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.