சுகாதார சங்கங்கள் அரசுக்கு வழங்கிய கால அவகாசம் நிறைவுக்கு வருகிறது : மீண்டும் போராட்டம் தொடருமா?

#SriLanka #strike #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சுகாதார சங்கங்கள் அரசுக்கு வழங்கிய கால அவகாசம் நிறைவுக்கு வருகிறது : மீண்டும் போராட்டம் தொடருமா?

பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார சங்கங்கள் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் (27.03) முடிவடைகிறது. 

எவ்வாறாயினும், அக்காலப்பகுதியில் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இதன்படி, தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெறும் தொழிற்சங்க தலைமைத்துவ சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர்  சானக தர்மவிக்ரம, "சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டணியின் 72 தொழிற்சங்கங்களின் 100,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பொருளாதார நீதிக்காக கடந்த சில நாட்களில் சுகாதார அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி அதன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். 

இப்பிரச்னைக்கு தீர்வு காண 10 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு சுகாதார செயலாளரின் கோரிக்கைக்கு அமைய, அந்த அவகாசம் முடிவடைகிறது. 

எமது பிரதிநிதியிடம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.