நாவலப்பிட்டியில் பேருந்து விபத்து - பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Accident #Hospital #Bus #School Student #nawalapitiya
Prasu
3 weeks ago
நாவலப்பிட்டியில் பேருந்து விபத்து - பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

நாவலப்பிட்டி தொலஸ்பாகேவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 9 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது . இந்த சம்பவம் நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியின் உடுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.