முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு!

#SriLanka #Mahinda Rajapaksa #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுத்து அதனை அறிவிக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் இன்று கொழும்பில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.