9 நாட்களில் 50, 537 சுற்றுலாப் பயணிகள்!

#SriLanka #Tourist
Mayoorikka
2 weeks ago
9 நாட்களில் 50, 537 சுற்றுலாப் பயணிகள்!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

 ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாள்களில் 50 ஆயிரத்து 537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 இதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 6 லட்சத்து 86 ஆயிரத்து 321 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.