நடுக்கடலில் சிக்கிய 200 கிலோ போதைப்பொருள்!
#SriLanka
#drugs
Mayoorikka
2 weeks ago
ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு படகுகளிலும் காணப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.