நாடளாவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு!

#SriLanka
Mayoorikka
2 weeks ago
நாடளாவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு!

புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் இதற்காக 14,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 இதற்கமைவாக, 14,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 400 இராணுவத்தினர் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.