வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெப்பக் குறியீடு, மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனத்திற்குரிய அளவில் உள்ளது என்று அது கூறுகிறது.
எனவே இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.