காங்கோவில் நிலச்சரிவு : 15 பேர் உயிரிழப்பு, 60இற்கும் மேற்பட்டோர் மாயம்!

#SriLanka #world_news #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
காங்கோவில் நிலச்சரிவு : 15 பேர் உயிரிழப்பு, 60இற்கும் மேற்பட்டோர் மாயம்!

தென்மேற்கு காங்கோவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளதுடன், 60 பேர் வரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உயிர் பிழைத்தவர்களைத் தேட உதவுவதற்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதுடன்,  ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக தீர்மானிப்பது கடினம் என்றும் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.