மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
அட்டமலை, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெற்பயிரில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று (15.04) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலன, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.