இரத்த அழுத்தம்: அறிகுறிகள், கடைப்பிடிக்க வேண்டியவை

#Health #BLOOD
Mayoorikka
1 week ago
இரத்த அழுத்தம்: அறிகுறிகள், கடைப்பிடிக்க வேண்டியவை

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதே உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். நீங்கள் உடல் பருமனாக இருந்தாலோ, அதிக உப்பு எடுத்துக் கொண்டாலோ, மன அழுத்தம் அதிகமாக வைத்திருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்யாத ஒரு நபராக இருந்தாலோ உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 நம் உடலின் தசைகளை வலுப்படுத்த உதவும் வால் ஸ்க்வாட்ஸ் பிளாங்க் போன்ற பயிற்சிகள் மூலம் ரத்த அழுத்தத்தை எளிதில் குறைக்கலாம் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தற்போதைய சூழலில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

 உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறையாது. இவை குறைய நேரம் எடுக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்பட மருந்துகள் அவசியம் தேவை. ஏனெனில் மருத்துவ தலையீடு இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியாது. எனினும் சிறந்த வழி என்பது மன அழுத்தத்தை குறைத்தல், சிறந்த தூக்கத்தை பெறுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் குறைந்த சோடியம் உணவு போன்றவை நீண்ட கால நடத்தை மாற்றங்கள் என்றாலும் இவையும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். அப்படியான குறிப்புகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

 அறிகுறிகள்

 ஒரு சிலருக்கு வயது காரணமாகவும் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். தலைவலி, மங்கலான பார்வை, குமட்டல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், மயக்கம், நெஞ்சுவலி, வலிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ரத்த அழுத்தத்தின் ஒரு சில அறிகுறிகள். உயர் ரத்த அழுத்தம் திடீரென அதிகரிப்பது இதய ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். 

ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது உடனடியாக சூடான குளியல் குளிக்கவும். இது தசைகள் மற்றும் இரத்த நாளங்களை தளர்த்த உதவும். குறைந்த ரத்த அழுத்தத்தை பெற முடியும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது உடனடியாக இளஞ்சூடான நீரில் குளிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செய்யும். ​

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க சுவாச பயிற்சிகள்​ உயர் ரத்த அழுத்தத்தை கையாளும் போது உ டனடியாக நீங்கள் தொடங்க வேண்டியது சுவாச பயிற்சிகள் தான். சுவாச பயிற்சி மன அழுத்தத்தை குறைக்க செய்யும். அதனோடு ரத்த அழுத்தத்தை குறைக்க எளிய பயிற்சியும் இதுதான். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர சுவாச பயிற்சியை தொடங்குவது நன்மை பயக்கும்.

images/content-image/2024/04/1713324827.jpg

 உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் என்ன சாப்பிட வேண்டும்? உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. சர்க்கரையைத் தவிர மறைமுகமாக சோடியம் சேர்க்கப்பட்ட பேக்கரி ஐட்டங்கள், ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரெடிமேட் உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோடா, சாஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொதுவாக பேக்கேஜ செய்யப்பட்டுள்ள எல்லா வகையான உணவுகளிலும் சோடியம் ஒரு பிரிசர்வேட்டிவ்வாக பயன்படுத்தப்படுகிறது.

 நீங்கள் உடல் பருமனாக இருந்தாலோ, அதிக உப்பு எடுத்துக் கொண்டாலோ, மன அழுத்தம் அதிகமாக வைத்திருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்யாத ஒரு நபராக இருந்தாலோ உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

 ஒரு சிலருக்கு வயது காரணமாகவும் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். தலைவலி, மங்கலான பார்வை, குமட்டல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், மயக்கம், நெஞ்சுவலி, வலிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ரத்த அழுத்தத்தின் ஒரு சில அறிகுறிகள். நமது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலமாக ரத்த அழுத்தத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். 

எல்லா ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு டயட்டை சாப்பிடுவதன் மூலமாகவும், சோடியம், சேச்சுரேட்டட் ஃபேட் அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். 

 உயர் ரத்த அழுத்தம் என்பது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பலர் தங்களுக்கு உயரத்த அழுத்தம் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். 

உடல் பருமன் மற்றும் வகை 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும், அதன் விளைவாக பக்கவாதம் உண்டாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

ஆகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அழிப்பது மிகவும் அவசியம். டயட்ரி அப்ரோச்சஸ் டு ஸ்டாப் ஹைப்பர்டென்ஷன் (Dietary Approaches to Stop Hypertension) அல்லது DASH டயட் என்று சுருக்கமாக சொல்லப்படும் உணவு முறையானது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான ஒரு உணவு முறையாகும்.

 இந்த உணவு முறையில் குறிப்பாக சோடியம் சேச்சுரேட்டட் ஃபேட் மற்றும் சர்க்கரை போன்ற உணவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சேர்க்கப்படுகிறது

images/content-image/2024/04/1713324893.jpg

 உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்களுக்கான ஒரு சில டயட் டிப்ஸ்கள்: 

 பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக உதவுவதால் ஹை BP கொண்ட நபர்கள் இவற்றை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், பருப்பு வகைகள், பால், தயிர், காட்டேஜ் சீஸ், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், இளநீர், பச்சை இலை காய்கறிகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, பூசணி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றில் இந்த தாதுக்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த உணவுகளில் அதிக உணவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது தமனிகளில் ப்ளேக் உருவாவதை தடுப்பதன் மூலமாக ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கிறது.

 எல்லா ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு டயட், போதுமான அளவு தண்ணீர் பருகுதல், போதுமான அளவு தூக்கம் பெறுதல், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் சமமாக முக்கியமாக கருதப்படுகிறது.