கம்பஹா பகுதியில் 12 மணித்தியால நீர்வெட்டு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
சபுகஸ்கந்தவில் உள்ள மின்சாரத் தொகுதியில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப் பணி காரணமாக கம்பஹாவில் இன்று (19.04) முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWS&DB) தெரிவித்துள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு பிரிவுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, முனுவாங்கொட மற்றும் கம்பஹா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
NWSDB ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதுடன், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.