கிளிநொச்சியில் அன்னை பூபதிக்கு நினைவேந்தல்!
#Kilinochchi
Mayoorikka
1 week ago
தியாகத்தாய் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல், இன்று (2024.04.19) காலை கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில், அடையாள உண்ணாவிரதத்துடன் ஆரம்பமாகி, நினைவுரைகளோடு நிறைவுற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சி மன்றங்களின் மேனாள் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.