சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு!

#SriLanka #Tourist
Mayoorikka
2 weeks ago
சுற்றுலாப் பயணிகள் அதிகம்  குவியும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு!

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதனை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பு காலிமுகத்திடல், புதுக்கடை , பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் இரவு வேளைகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.