ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல உண்மைகளை அம்பலப்படுத்தினார் தந்தை சிறில் காமினி!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய முன்னர் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை தந்தை சிறில் காமினி இன்று (20.04) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் சேனலுக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி தந்தை இந்த உண்மைகளை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, கத்தோலிக்க பத்திரிகையான “ஞானார்த்த பிரதிபய”வின் பிரதம ஆசிரியர் சிறில் காமினி நேற்று (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு தந்தை சிறில் காமினி கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்து விட்டு சென்றார்.
அதன் பிரகாரம் இது தொடர்பான 8 விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக தந்தை சிறில் காமினி இன்று செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் பல கேள்விகளை முன்வைத்து விளக்கமளித்துள்ளார்.
இதன்படி நவம்பர் 30, 2018 அன்று வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விஷயங்கள்."
"இரண்டாவது... சஹாரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த ஐபி முகவரியை யார் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி."
"மூன்றாவது... வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்."
"நான்காவதாக... தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் செல்போனுக்கு அழைப்பு."
"ஐந்தாவது... தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?" போன்ற கேள்விகளை முன்வைத்து விளக்கமளித்துள்ளார்.