பிரித்தானியாவில் விருது பெற்ற இலங்கைப் பெண்!

#Britain #Award
Mayoorikka
2 weeks ago
பிரித்தானியாவில் விருது பெற்ற இலங்கைப் பெண்!

2024 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கையரான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார்.

 அதாவது The English Hair and Beauty Awards, Chapter 3இன் ஆண்டின் சிறந்த அழகுக்கலைஞராக Anjalee Laser Beauty and Spa நிறுவனத்தை நடத்தி வரும் அஞ்சலி ராஜசிக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21, 2024 ஞாயிற்றுக்கிழமை தி மெர்க்யூர் பெட்ஃபோர்ட் சென்டர் ஹோட்டலில் நடந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

 மேலும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து லூடன் நகருக்குச் சென்ற அஞ்சலி, தனது கணவர் மற்றும் மகனின் உதவியுடன் தொழிலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க விருதை வெல்வது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். 

ஏனெனில் இது ஒப்பனை மற்றும் அழகு கலை நிபுணர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கிறமை குறிப்பிடத்தக்கது.