ஆசிய நாடுகளில் கடும் வெப்பநிலை பதிவு : நீர் இன்றி தவிக்கும் மக்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
ஆசிய நாடுகளில் கடும் வெப்பநிலை பதிவு : நீர் இன்றி தவிக்கும் மக்கள்!

ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 1901-ம் ஆண்டுக்குப் பிறகு கிழக்கு இந்தியாவிலிருந்து அதிக வெப்பமான ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.

இந்தியாவை பாதித்துள்ள இந்த வெயிலின் தாக்கத்தால், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பங்களாதேஷிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளது மற்றும் 7 தசாப்தங்களில் நாட்டை பாதித்த மிக மோசமான வெப்ப அலை வானிலையாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் வெப்பமான காலநிலையும் பதிவாகியுள்ளதுடன், அதன் தாக்கத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.