கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 118 ஆவது இல்லம் கையளிப்பு!

#SriLanka #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 118 ஆவது இல்லம் கையளிப்பு!

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலிருந்து புது மாற்றங்களுடன் இல்லங்களை நிர்மாணித்து வழங்கி வருகின்றது. 

images/content-image/1715081773.jpg

அந்தவகையில் கடந்த 01.05.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 118 ஆவது இல்லமும் Ravi Rajani family_ ஜீவ ஊற்று நியூஸ்லாந்து_கிளையினரின் 08 ஆவது இல்லமும் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இல்மானது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.  

images/content-image/1715081812.jpg  

இதற்கான நிதி உதவியை ரவி அவர்களின் மகன் Edwin Caleb Titus வழங்கியுள்ளார். இவ் மகத்தான உதவியினை நல்கிய சகோதரனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அத்தோடு தேவையுள்ள ஏராளமான  மக்கள்  தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.