உடைத்து நொறுக்கப்பட்ட எ .டி .எம் இயந்திரம் சிக்கிய 4 கொள்ளையர்கள்

கம்பளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை நான்கு சந்தேக நபர்கள் முற்றாக அகற்றிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.
தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு சிற்றூர்தியில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு முன்னதாக, குறித்த சந்தேகநபர்கள் வங்கியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிவைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தொகை தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..