இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இணையும் 3-வது நிறுவனம் - மத்திய அரசு தகவல்

Prabha Praneetha
4 years ago
இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இணையும் 3-வது நிறுவனம் - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், 3-வது தடுப்பூசியாக ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“கொரோனாவுக்கு எதிராக ஜைடஸ் கேடிலா நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கியுள்ள ஊசியில்லாத கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி விலை குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த தடுப்பூசியை 3 டோஸ் போட வேண்டும். ஊசியின்றி ( மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி தடுப்பூசி செலுத்த முடியும்) செலுத்தக்கூடியது. தற்போதைய தடுப்பூசி விலையில் இருந்து இதன் விலை வேறுபட்டதாக இருக்கும். தடுப்பூசி திட்டத்தில் இந்த தடுப்பூசி இணைக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4