இன்று 29-10-2021 உலக பக்கவாத தினம் ஆகும்.

#history
இன்று 29-10-2021 உலக பக்கவாத தினம் ஆகும்.

பக்கவாத நோய் என்பது திடீரென்று மூளைக்கு செல்லும் ரத்தகுழாயில் ஏற்படும் பாதிப்பாகும். உலகம் முழுவதும் மரணத்தை உண்டாக்கும் முக்கியமான நோயாக பக்க வாதம் காணப்படுகிறது.
 
இரத்த அழுத்தம், நீரிழிவு, மது, புகைப்பிடித்தல், புகையிலை பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமன் நோய், உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு மற்றும் முறையான உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களுக்கு மரபணு காரணம் மற்றும் பரம்பரையாகவும் பக்கவாதம் வரவாய்ப்புள்ளது.
 
திடீரென்று ஒரு பக்க கை அல்லது கால் அல்லது இரண்டுமே செயலிழந்து போகும். கண் பார்வை மங்கும். இரண்டு கால்களும் செயலிழந்து தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறும். அதேபோல் வாய் ஒரு பக்கமாக கோணல் ஏற்படும். பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், 3 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.