இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை; மின்சார சபையில் பதற்றம்
Reha
2 years ago
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு, மின்சார சபை தலைவர் தீர்மானம் எடுத்ததாக கூறப்படுகின்றது.
அவரின் அந்த தீர்மானத்திற்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னடுக்கப்படுகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.