அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் திட்டம் உள்ளதா?

Mani
1 year ago
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் திட்டம் உள்ளதா?

ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 4% சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகி உள்ளது.

விலைவாசி உயர்வை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு உயர்த்தி வணங்கப்படுகிறது தற்போது மத்திய அரசு 4% சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கவுள்ளது.

அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பொதுச் செயலர் சிவகோபால் மிஸ்ரா கூறுகையில்,

தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு ஜனவரி 2012 அன்று வெளியிடப்பட்டது. தொழிற்சாலை தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் முந்தைய மாதத்தை விட 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதாவது, நடப்பு 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. 

தற்போதைய விகிதத்தில் இருந்து 2 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.