நாம் தமிழர் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சீமானின் தொண்டனா? மனைவியா? மகனா?

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Lanka4 #srilanka freedom party #India
Prabha Praneetha
1 year ago
நாம் தமிழர் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சீமானின் தொண்டனா? மனைவியா? மகனா?

ஒவ்வொரு நாட்டிலும் அரசியலில் வாரிசுகளுக்கு அல்லது குடும்ப தலைவிக்கு முதலுரிமை கொடுப்பது எழுதப்படாத சட்டம்.

அந்தவகையில் இந்திய தமிழ் நாட்டு வாரிசு ஆட்சியை எமது கட்சி கொண்டு வராது என தேர்தல் வாக்குகளை வாங்குவார்கள் ,

பின்னர் கட்சி வளர்ந்துவந்ததும் மாற்றிவிடுவார்கள். உதாரணமாக டொக்டர் ராமதாஸ் அவர்கள் அன்புமனிக்கு வாரிசு மணியைக் கட்டியது.

இப்படி பல கட்சிகளை பட்டியல் போடலாம். இவ்வகையில் எங்கள் செந்தமிழன் சீமான் அவர்கள் தனக்குப் பின்னர் வாரிசுகளை கொண்டு வருவாரா? அல்லது மனைவியை அரியாசனத்தில் அமர்த்தி குடும்ப ஆட்சியை செய்யப்போகிறாரா என கட்சிக்குள்ளேயும் , மற்றும் அவரை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் கேழ்வி எழுந்துள்ளது.

காரணம் பிரபாகரனையும் தமிழையும் வைத்து கட்சியையும் கொள்கையையும் கொண்டு நடாத்தும் தற்பொழுது கட்ச்சி வண்டி நன்றாக ஓடிகிறது,

வரும் காலங்களில் கட்சியை பொறுப்பேற்ப்பவர்கள் தமது கொள்கையை திரிவுபடுத்தி ஈழ ஆதரவாளர்களையும் பிரபாகரனையும் . சீமானின் கடின உழைப்பால் பெற்ற நல்ல விசுவாசமான தொண்டர்களையும் தவறான வளிக்கு இட்டுச் செல்வார்களா என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் நெடுமாறன். தொல் திருமா. வைகோ இவர்களைப்போல மாறாமல் சீமானின் இறுக்க தமிழ் பாதை சிதை ந் து விடுமா என ஏக்கத்தில் சிலர் உள்ளன. நியாயமான கேள்வி . சீமான் இந்த கேள்விக்கு என்ன பதில் கூறப்போகின்றார் . என்பதை அறிய சீமானின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாமும் கேட்கின்றோம்.