ட்விட்டர் சந்தாதாரர்கள் அல்லாதவர்களின் கணக்குகளில் இருந்து நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை நீக்கியுள்ளது.

#ElonMusk #Twitter
Mani
1 year ago
ட்விட்டர் சந்தாதாரர்கள் அல்லாதவர்களின் கணக்குகளில் இருந்து நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை நீக்கியுள்ளது.

ட்விட்டரின் உரிமையாளரான பிறகு, எலோன் மஸ்க், பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் தங்கள் புளூடிக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்திய பயனர்கள் மாதம் ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாகலாம் என ட்விட்டர் அறிவித்துள்ளது. அதன்படி, பணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக்குகள் ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் நீக்கப்படும் என்று ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க் அறிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளில் இருந்து ட்விட்டர் புளூ டிக்களை நீக்கியுள்ளது. 

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் நீல நிற புள்ளிகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குநர்கள் ஷங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் நீல நிற புள்ளிகள் நீக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் சந்தாதாரர்களின் கணக்குகளில் உள்ள நீல நிற புள்ளிகள் நீக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் நீல நிற புள்ளிகள் நீக்கப்பட்டுள்ளன.