பிரான்ஸில் வெடிகுண்டு அச்சுறுத்தலை மேற்கொண்ட 5 பேர் கைது

#Arrest #France #Lanka4 #கைது #லங்கா4 #Bomb #பிரான்ஸ் #France Tamil News #Tamil News #Threat
Mugunthan Mugunthan
10 months ago
பிரான்ஸில் வெடிகுண்டு அச்சுறுத்தலை மேற்கொண்ட 5 பேர் கைது

பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஐவர் Val-de-Marne மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த அச்சுறுத்தல் விடுத்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 தொடக்கம் 17 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

images/content-image/1700208488.jpg

அவர்கள் Villeneuve-Saint-George மற்றும் Sucy-en-Brie நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை பிரான்சில் 996 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.