பிரான்ஸில் அகதியொருவர் இரயில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

#France #Refugee #Train #France Tamil News
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸில் அகதியொருவர் இரயில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

Eurostar தொடருந்து மீது ஏற முற்பட்ட அகதி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். பெப்ரவரி 8, வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

Gare du Nord தொடருந்து நிலையத்துக்கு வருகை தந்த அகதி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்த EuroStar தொடருந்து தரித்து நின்ற பகுதிக்குச் சென்று, அதன் மீது ஏற முற்பட்டுள்ளார். அதன்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

images/content-image/1707552789.jpg

 இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அகதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.