ரஷ்யாவிற்கு சென்றுள்ள இலங்கை வீரர்கள் தொடர்பில் நானூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரஷ்யாவிற்கு சென்றுள்ள இலங்கை வீரர்கள் தொடர்பில் நானூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையர்கள் தொடர்பில் 464 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவிற்கு சென்றவர்களின் எண்ணிக்கையை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "பலர் இந்தியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று ரஷ்யா சென்றுள்ளனர். அனைவரும் இலங்கையில் இருந்து ரஷ்யா சென்றார்களா என்று கணக்கிடுவது கடினம். 

ஆனால் புகார்கள் 464 பேரிடம் இருந்து வந்ததால் முதலில் அந்த நபர்களை பற்றி பேசுகிறோம்.

 ரஷ்ய உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

“இவர்கள் ரஷ்யா சென்ற பிறகு, ரஷ்ய ராணுவத்துடன் சண்டையிட பாதுகாப்புப் படையினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அந்த ஒப்பந்தங்கள் குறித்து அவர்களுக்குத் தெரியாது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இது சட்டப்படி செல்லுபடியாகும் ஒப்பந்தம்.தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 126ஐத் தொடர்புகொள்வது கடினம் என்பதால் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4