யானைகள் பற்றிய சனத்தொகை கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
யானைகள் பற்றிய சனத்தொகை கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் யானைகள் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வரும் 17ம் திகதி தொடங்கி மூன்று நாட்களுக்கு 3,130 கணக்கெடுப்பு மையங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கணக்கெடுப்பின் தரவு சேகரிப்பு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்களால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்காக பாதுகாப்புப் படையினர் உட்பட ஏனைய அரச நிறுவனங்களின் பணியாளர்களை வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். ஜி. சி. சூரியபண்டார தெரிவித்தார். 

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.எம்.ஜி.சி.சூரியபண்டார மேலும் தெரிவிக்கையில், பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் யானை இனத்தின் எதிர்கால இருப்பைக் கணித்து, மனித-யானைகளை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4