கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மீண்டும் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதால் வைத்திய சேவைகள் இன்றி பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் பணிகஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேவைகள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகைதராத காரணத்தினால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகைதந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினர்.
தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் தெரிவித்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்