ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் - அனுரகுமார திஸாநாயக்க

Prabhaat month ago

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியை நன்றாக மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இரவோடு இரவாக  போன் செய்கிறாரா என்று தெரியவில்லை,” என்றார்.

அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பதுதான் இப்போது தேட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.