இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-03-2022

பொன்மொழி - 01 -
தலைப்பு:-கவலை
இல்லாதவனுக்கு
இருக்கிறவனைப் பார்த்துக்
கவலை - பணம்.
இருக்கிறவனுக்கு
இல்லாதவனைப்பார்த்துக்
கவலை - நோய்

பொன்மொழி - 02 -
தலைப்பு:-தப்பு
நம்மை தப்பாக
புரிந்து
கொண்டவர்களுக்கு...
நாம் செய்யும்
அனைத்தும்
தப்பாகவே தெரியும்.

பொன்மொழி - 03 -
தலைப்பு:-கோபம்
அடிக்கடி கோபப்பட்டால்
கோபத்திற்கு மரியாதை
இல்லை!
கோபமே படாவிட்டால்
நமக்கே மரியாதை இல்லை.

பொன்மொழி - 04 -
தலைப்பு:-கையில்
எதுவும்
கையில் கிடைப்பதற்கு
முன்பே, கனவுகளை
வளர்த்துக் கொள்ளாதே.
கையில் கிடைத்தவையே
இந்த உலகில்
நிரந்தரம் இல்லை!

பொன்மொழி - 05 -
தலைப்பு:-பாதை
கடந்து வந்த பின்தான் புரிகிறது
இன்னும் அழகாய் வந்த பாதையை
கடந்திருக்கலாமோ என்று...
மீண்டும் நடக்க நினைக்கையில்
பயணம் முடிவடைந்து விடுகிறது....
நடக்கும் போதே அழகாய்
கடந்திடுவோம் நமக்கான
பாதைகளில்....

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..