மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

#SriLanka #Maithripala Sirisena
Mayoorikka
2 weeks ago
மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று(18) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே மைத்திரிபால சிறிசேனவிற்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.