பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

இந்த சந்தேகநபர்கள் தங்கம் ஒன்றை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதி கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 37 கிலோ தங்கத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் கல்பிட்டி நீதவான் நீதிமன்றம் 5 சந்தேக நபர்களை பெயரிட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மெனிகின்ன, காலி, புத்தளம் மற்றும் குன்னேபான ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் தமது பிரதேசங்களை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இதன்படி, பின்வரும் புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1763 அல்லது 071 859 4916 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

images/content-image/1714051149.jpg