பலரிடம் பணமோசடி செய்த பெண் கைது

Nila
4 years ago
பலரிடம் பணமோசடி செய்த பெண் கைது

பணம் மோசடி செய்த 49 வயதுடைய  பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடுவலை- கொரதொட்ட பிரதேசத்தில் வைத்து நவகமுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

ஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, நவகமுவ பிரதேசத்தில் இரு இளைஞர்களிடம், 8 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் செய்த  முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு எதிராக 32 முறைப்பாடுகள் உள்ளதாகவும் நீதிமன்றத்தால் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4