உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

Nila
4 years ago
உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதியும் புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதியும் நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4