எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது - நயன்தாரா ஓபன் டோக்

Nila
3 years ago
எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது - நயன்தாரா ஓபன் டோக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாராவிடம், கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.