3 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு தகவல்

Reha
3 years ago
3 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கடந்த 4-ந் தேதி வரை 3,05,482 கர்ப்பிணிகளுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 456 பேர் இரு டோஸ்களும் போட்டு விட்டனர். இதைப்போல திருநங்கைகளுக்கு 91,104 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 77,457 பேர் முதல் டோசும், 13,647 பேர் 2-வது டோசும் போட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க சுகாதார அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக, தொற்றின் போக்கு குறித்து மாவட்ட அளவிலேயே கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இதைத்தவிர கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.