பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரு கொள்ளையர்கள் பலி!

Prathees
4 years ago
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரு கொள்ளையர்கள் பலி!

திஸ்ஸமஹாராம - சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (17) பிற்பகல் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பெண் ஒருவரின் க​ழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சூரியவெவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று ஜீப் வாகனத்தில் குறித்த கொள்ளையர்களை துரத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கொள்ளையர்கள் பொலிஸ் வாகனத்திற்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த கொள்ளையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸ் ஜீப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி அருகில் இருந்த மரத்தில் மோதுண்டதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4