கத்தரிக்காய் விரும்பாதவர்களும் விரும்பும் குழம்பு
Mugunthan Mugunthan
3 years ago
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் (சிறியது) – ஏழு எண்ணம் (தோராயமாக கால் கிலோ)
- பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
- தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
- புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
- பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
- மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (பெரியது)
- வெள்ளைப் பூண்டு – 10 பற்கள் (பெரியது)
- மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
- கொத்தமல்லிப் பொடி - 2 & 1/2 ஸ்பூன்
- மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
- மண்டை வெல்லம் – 2 துண்டுகள் (சிறிய நெல்லிக்காய் அளவு)
- உப்பு – தேவையான அளவு
மசால் அரைக்க
- நிலக்கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
- எள் – 3 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- மிளகு – 1 ஸ்பூன்
- வெந்தயம் 1/2 ஸ்பூன்
- தாளிக்க
- நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கீற்று
செய்முறை
- கத்தரிக்காயின் அடியில் உள்ள பூவிதழ் பகுதியை விட்டு விட்டு நீளமான காம்பினை மட்டும் வெட்டவும்.
- கத்திரிக்காயை லேசாக படத்தில் உள்ளவாறு கீறிக் கொள்ளவும்.
- கீறிய கத்தரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வைக்கவும். இவ்வாறு செய்வதால் கத்தரிக்காய் கறுத்துப் போகாது.
- வெறும் வாணலியில் நிலக்கடலைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த நிலக்கடலை எனில் லேசாக சூடேற்றிக் கொள்ளவும்.
- அதே வாணலியில் எள்ளினைப் போட்டு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில் மிளகு, சீரகம், வெந்தயத்தைச் சேர்த்து, வெந்தயம் சிவந்து சீரகம் பொரியுமாறு வறுத்துக் கொள்ளவும்.
- மிளகு,சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்ததும
- மிளகு,சீரகம் மற்றும் வெந்தயம் வறுத்ததும்
- வறுத்த பொருட்களை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் நிலக்கடலை, எள், வெந்தயம், சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
- மிளகு,சீரகம்,வெந்தயம்,நிலக்கடலை மற்றும் எள் ஆகியவற்றை மிக்சியில் சேர்த்ததும்
- தக்காளியை அலசி சிறுசதுரத் துண்டுகளாக வெட்டவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.
- வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
- புளியைப் பிய்த்துப் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
- கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
- வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் கீறிய கத்தரிக்காய்களைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
- எண்ணெயில் கத்தரிகாயைச் சேர்த்ததும்
- அதே எண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
- அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கிளறவும்.
- அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து வெள்ளைப்பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசிந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதனுடன் வதக்கிய கத்தரிக்காய் சேர்த்து லேசாக பிரட்டி விடவும்.
- பின்னர் மல்லிப் பொடி, மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்த்து பிரட்டி விடவும்.
- அதனுடன் கரைத்து வைத்துள்ள புளியைக் கரைசல் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். அவ்வப்போது கலவையை கிளறி விடவும்.
- எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் அரைத்து வைத்துள்ள நிலக்கடலை விழுதினைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, அடுப்பினை மிதமான தீயில் வைத்து மூடி போடவும்.
- இரண்டு நிமிடங்கள் கழித்து மண்டை வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.
- பின்னர் ஒரு நிமிடம் கழித்து கொத்தமல்லி இலையைத் தூவிக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சுவையான கத்தரிக்காய் கிரேவி தயார்.