குழந்தைகளுக்கு கோழி இரத்தத்தை ஊசி மூலம் செலுத்தும் சீனா! வினோத காரணம்

#world_news
Yuga
4 years ago
குழந்தைகளுக்கு கோழி இரத்தத்தை  ஊசி மூலம் செலுத்தும் சீனா! வினோத காரணம்

சீனாவில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு 'கோழியின் இரத்தம்’ கொண்ட ஊசியைச் செலுத்தும் நடவடிக்கை பிரபலமடைந்து வருகின்றது.  

தங்களின் பிள்ளைகள்  திறன் படைத்தவர்களாக வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர்களே இவ்வாறு  சிக்கன் பேரண்டிங் (chicken parenting) என்ற வினோதமான குழந்தை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குழந்தை வளர்ப்பு முறையின் மூலம் கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்  என அவர்கள் கருதுவதாகக்  கூறப்பட்டுள்ளது.

மேலும் இக் கோழி இரத்தமானது சிறுவர்களின் உடலில்  உயர் செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாகவும் இதனால் சிறுவர்கள், கல்வி விளையாட்டு என அனைத்து விடயங்களிலும் அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4