உறுதியான சமந்தா நாக சைதன்யா விவாகரத்து-விவகாரத்துக்கான காரணம் கூறிய சைதன்யா

Prasu
4 years ago
உறுதியான சமந்தா நாக சைதன்யா விவாகரத்து-விவகாரத்துக்கான  காரணம் கூறிய சைதன்யா

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சாக உள்ளது.

நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனாவின் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா கூடுதல் கவர்ச்சி காட்டி வருகிறார்.

சமந்தா கவர்ச்சியாக நடிப்பது மற்றும் போட்டோஷூட்டுகளில் கலந்து கொள்வது அவரின் கணவரின் குடும்பத்தாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தவிடம் பல முறை பேசியும் பலனில்லையாம்.

ஏற்கனவே கவர்ச்சி பிரச்சனை இருந்த நேரத்தில் சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தது புகுந்த வீட்டில் மேலும் பிரச்சனையாகிவிட்டதாம்.

சமந்தா தன் கெரியர் விஷயத்தில் மாறுவதாக இல்லாததால் விவாகரத்து வரை வந்திருக்கிறதாம். பிரிவது என்று முடிவு எடுத்த பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றார்களாம். கவுன்சிலிங்கிற்கு பிறகும் அவர்கள் மனம் மாறவில்லையாம். விவாகரத்து நடப்பது உறுதி என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து விஷயம் இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தீர்மானமாகிவிடுமாம். விவாகரத்து மூலம் சமந்தாவுக்கு ரூ. 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்குமாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4