பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட 4 பேர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

#world_news
Yuga
4 years ago
பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட 4 பேர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் 3 குழந்தைகளுடன் கொலை செய்யப்பட பெண் குறித்து, விசாரணையில் புதிய அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
இங்கிலாந்தின் Derbyshireஇலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, Terri Harris (35) என்ற பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவர், அந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் தோழி என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
 
அதனைத் தொடர்ந்து, நான்கு மணி நேரப் பயணத்துக்குப்பின் வீடு திரும்பிய அந்த குழந்தைகள் இருவரின் தந்தையான Jason Bennett சமூக ஊடகங்களில் தன் பிள்ளைகளை நினைத்து வெளியிட்ட மனதை உருக்கும் செய்திகளிலிருந்து, உயிரிழந்த குழந்தைகளின் பெயர் John (13) மற்றும் Lacy (11) என தெரியவந்தது.
 
உண்மை என்னவென்றால், Jasonம் அவரது மனைவியான Terri Harrisம் பிரிந்திருக்கிறார்கள். பிள்ளைகள் John மற்றும் Lacy தங்கள் தாயான Terriயுடன் வாழ்ந்துவந்த நிலையில், Terri, Damien Bendall (31) என்ற நபரை காதலித்திருக்கிறார். தற்போது அந்த Damienதான் Terriயையும் குழந்தைகள் John மற்றும் Lacyயையும், Lacyயின் தோழியான Connie Gent (11)ஐயும் கொலை செய்திருக்கிறான்.
 
பிறகு, தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், Damien-ஐ உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் கொலை நடந்த இடத்திலேயே பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
இதற்கிடையில், அக்கம் பக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. அப்போது ஒரு பேரதிர்ச்சி தரும் தகவலை Terri Harris-ன் பக்கத்து வீட்டு நண்பர் வெளியிட்டுள்ளார்.
 
ஆதாவது, கொலை செய்யப்பட்டபோது Terri Harris கர்ப்பமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். கர்ப்பத்தின் மிக ஆரம்ப நிலையில் இருந்ததால், Harris இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் இது குறித்து தனது தாயிடம் அடிக்கடி பேசியதாக அவர் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4