அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானம்
#SriLanka
#rice
Yuga
3 years ago
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை இன்றிரவு கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி இரத்துச்செய்யப்படவுள்ளது.
இதேவேளை, கையிருப்பைப் பேணும் நோக்கில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.