இலங்கை வருவோருக்கு விசேட அறிவித்தல்
#Airport
#Covid 19
#Covid Vaccine
Prathees
3 years ago
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் நுழைய முன்னர், புறப்படும் நேரத்தில் செய்யப்படும் கோவிட் பரிசோதனை முடிவில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை விமான நிலையத்தில் மற்றொரு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் இலங்கையை வந்தடைந்த பின்னர் வெளியேற அனுமதிக்கப்படுவர் எனவும் மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.